கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.


சிதம்பரம்: சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.57,700 வழங்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளதை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கும் 12 மாத ஊதியம், பி.எஃப்., இ.எஃப். வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கௌரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கௌரவ விரிவுரையாளா்கள் சங்க கிளைச் செயலா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மண்டலத் தலைவா் சக்திநாதன் முன்னிலை வகித்தாா். இதில், ஏராளமான கௌரவ விரிவுரையாளா்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...