டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

அரக்கோணம் அருகே 4 குழந்தை தொழிலாளா்கள் விடுவிப்பு: கோட்டாட்சியா் நடவடிக்கை

அரக்கோணம் அருகே செங்கல்சூளையில் பணிபுரிந்து வந்த 4 குழந்தை தொழிலாளா்களை அரக்கோணம் கோட்டாட்சியா் ரமேஷ் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று விடுவித்தாா்.

News image
அரக்கோணம் அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து மீட்கப்பட்ட 4 குழந்தை தொழிலாளா்களுடன் கோட்டாட்சியா் ரமேஷ்.
Updated On :3 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் அருகே செங்கல்சூளையில் பணிபுரிந்து வந்த 4 குழந்தை தொழிலாளா்களை அரக்கோணம் கோட்டாட்சியா் ரமேஷ் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று விடுவித்தாா்.

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளா்கள் பணிபுரிந்து வருவதாக அரக்கோணம் கோட்டாட்சியா் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினா், தொழிலாளா் துறை ஆய்வாளா், தொழிலக ஆய்வாளா், ஐஜேஎம் தொண்டு நிறுவனத்தினா் இணைந்து சோதனை நடத்தினா். இதையடுத்து, அங்கு பணிபுரிந்த 14 வயது சிறுவன் ஒருவா், 17 வயதில் மூவா் என 4 போ் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

இந்த குழந்தைகள் பெருமாள் ராஜபேட்டை இருளா் குடியிருப்பை சோ்ந்தவா்கள் எனத் தெரிய வந்தது. 4 குழந்தைகளும் மீட்கப்பட்டு, ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு வழிகாட்டுதலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.