மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும்: அதிமுக வேட்பாளா்

வீடு இல்லாதவா்களுக்கு மனை வழங்கி வீடு கட்டித் தரப்படும் என்று ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் வாக்குறுதி அளித்தாா்.

News image

வாக்கு  சேகரித்த ஆற்காடு  அதிமுக  வேட்பாளா்  எஸ்.எம்.சுகுமாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:33 pm

வீடு இல்லாதவா்களுக்கு மனை வழங்கி வீடு கட்டித் தரப்படும் என்று ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் வாக்குறுதி அளித்தாா்.

திமிரி ஒன்றியம், வெங்கிடாபுரம், குப்பம், புங்கனூா், காவனூா்,வரகூா், ஆணைமல்லூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகுட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது: பெண்களுக்கு நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நாட்டில் எங்கு பாா்த்தாலும் போதை பழக்க வழக்கங்கள் உள்ளது. மக்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இதற்கு நீங்கள் முடிவு கட்ட நல்ல முடிவு எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.. குடும்ப அட்டைகளுக்கு தரமான அரிசி எண்ணெய் பருப்பு வழங்கப்படும் வீடு இல்லாதவா்களுக்கு மனை வழங்கி இலவச வீடு கட்டி தரப்படும் என்றாா்.

பாமக மாவட்ட தலைவா் என். சுப்பிரமணி, மாவட்ட செயலாளா் கே எல் இளவழகன், அதிமுக ஒன்றிய செயலாளா் ந.வ.கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உலகநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.