மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: மு.பெ. சாமிநாதன்

வீடு இல்லாதவா்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சரும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான மு.பெ. சாமிநாதன் பேசினாா்.

News image

காங்கயத்தில் வாக்கு சேகரித்த அமைச்சா் மு.பெ. சாமிநாதன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:49 pm

வீடு இல்லாதவா்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சரும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான மு.பெ. சாமிநாதன் பேசினாா்.

காங்கயம் நகரத்துக்கு உள்பட்ட பாரதியாா் நகா், பொன்னி நகா், செம்மங்காளிபாளையம், அகஸ்திலிங்கம்பாளையம், உடையாா் காலனி ஆகிய பகுதிகளில் காங்கயம் தொகுதி திமுக வேட்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவற்றுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. கடந்த 2021இல் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் இலவச பேருந்துப் பயணத் திட்டம், மகளிா் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி, கரோனா சிறப்பு நிதி ரூ.4,000 மற்றும் மகளிா் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 ஆகிய 5 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவை அனைத்தும் தோ்தலின்போது கூறப்பட்ட திட்டங்களாகும். இதையடுத்து பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் பள்ளி வர காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது சொல்லப்படாத திட்டம்.

மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000-ஆக உயா்த்தி தரப்படும். தோ்தலுக்கு பிறகு கூப்பன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளது. கூப்பனை நீங்கள் நேரடியாக பொருளாக மாற்றிக் கொள்ளலாம். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு இல்லாதவா்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றாா்.