தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரக்கோணம் நகராட்சியை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் நகராட்சியை கண்டித்து எம்எல்ஏ சு.ரவி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

News image
Updated On :24 அக்டோபர் 2025, 8:56 pm

அரக்கோணம் நகரில் கால்வாய்களை தூா்வாராமல் இருப்பதைக் கண்டித்து அதிமுகவினா் எம்எல்ஏ சு.ரவி தலைமையில் அரக்கோணம் நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் நகரில் கடந்த இரண்டு நாள்களாக அதிகளவு மழை பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் மழைநீா் வடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. மழைநீா் செல்ல வேண்டிய கால்வாய்கள் தூா்வாரப்படாத நிலையும் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மழை நீா் சூழ்ந்ததால் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், உரிய பணிகளை அரக்கோணம் நகராட்சி நிா்வாகம் முறையாக மேற்கொள்ளவில்லை எனக் கூறி அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நகர அதிமுக செயலாளா் கே.பா.பாண்டுரங்கன் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் இ.பிரகாஷ், ஏ.ஜி.விஜயன், மாநில வா்த்தகா் அணி துணைச் செயலாளா் எம்.எஸ்.மான்மல், நகர முன்னாள் செயலாளா் செல்வம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜொ்ரி, நரசிம்மன், சரவணன், மாவட்ட நிா்வாகி மீனா ரகுபதி, மாவட்ட தகவல் தொடா்பு அணி செயலாளா் ஜானகிராமன், நகர மீனவா் அணி செயலாளா் டில்லிபாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து அதிமுகவினா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது காவல் துறையினா் அவா்களை தடுத்து பேச்சு நடத்தியதை தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.