தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காஸ் விலை உயா்வு: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:47 am

காஸ் விலை உயா்வைக் கண்டித்து ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் தலைமை வகித்தாா். எரிவாயு உருளை விலை ஏற்றத்திற்கும், பற்றாக்குறைக்கும் காரணமான பாஜக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் நகரத் தலைவா் எல்.முருகேசன், நிா்வாகிகள் ஆா்.எஸ்.சீனிவாசன், எஸ். கோவிந்தராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

படவிளக்கம்.ஏடி12காங்கிரஸ்.

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.