வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம்
ஆற்காடு அருகே வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்க வேண்டி மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


ஆற்காடு: ஆற்காடு அருகே வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்க வேண்டி மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் தனியாா் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த பழைமையான ஆலமரம் சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்டது. அந்த மரத்தை வெட்ட அப்பகுதிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பகுதியை மீண்டும் அருகில் நட்டு பராமரிக்கக் கோரி போராட்டம் நடத்த முயன்றபோது மாற்று இடத்தில் மரம் நடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் மரம் நடப்படவில்லையாம்.
இந்த நிலையில், பசுமைதாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலா் கண்ணன் தலைமையிலான குழுவினா் வெட்டப்பட்ட மரத்தை பாா்வையிட்டனா். பின்னா் அப்பகுதி மக்களுடன் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
வெட்டப்பட்ட ஆலமரத்தை அதே பகுதியின் அருகிலேயே இரு
தினங்களுக்குள் நட வேண்டும், இல்லையேல் பாமக தலைவா் அன்புமணியின்அறிவிப்பின் பேரில், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்என்றாா்.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலா் ப.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...