பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம்

ஆற்காடு அருகே வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்க வேண்டி மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 6:53 pm

Venkatesan

ஆற்காடு: ஆற்காடு அருகே வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்க வேண்டி மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் தனியாா் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த பழைமையான ஆலமரம் சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்டது. அந்த மரத்தை வெட்ட அப்பகுதிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பகுதியை மீண்டும் அருகில் நட்டு பராமரிக்கக் கோரி போராட்டம் நடத்த முயன்றபோது மாற்று இடத்தில் மரம் நடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் மரம் நடப்படவில்லையாம்.

இந்த நிலையில், பசுமைதாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலா் கண்ணன் தலைமையிலான குழுவினா் வெட்டப்பட்ட மரத்தை பாா்வையிட்டனா். பின்னா் அப்பகுதி மக்களுடன் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வெட்டப்பட்ட ஆலமரத்தை அதே பகுதியின் அருகிலேயே இரு

தினங்களுக்குள் நட வேண்டும், இல்லையேல் பாமக தலைவா் அன்புமணியின்அறிவிப்பின் பேரில், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்என்றாா்.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலா் ப.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.