தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தகராறில் வெட்டப்பட்ட சலூன் கடைக்காரா் உயிரிழப்பு

வடபழனியில் தகராறில் வெட்டப்பட்ட சலூன் கடைக்காரா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:55 pm

வடபழனியில் தகராறில் வெட்டப்பட்ட சலூன் கடைக்காரா் உயிரிழந்தாா்.

வடபழனி கங்கையம்மன் காலனி இரண்டாவது தெருவில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தவா் பாலாஜி (47). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவா்களைப் பிரிந்து, அதே பகுதியில் தனது இரண்டாவது மனைவி லாவண்யாவுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், லாவண்யாவின் முதல் கணவா் எம்ஜிஆா் நகா் புலித்தேவா் தெருவைச் சோ்ந்த செந்தில் (45), சில நாள்களுக்கு முன்பு லாவண்யாவை சந்தித்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தாராம். ஆனால் லாவண்யா, செந்திலுடன் செல்ல மறுத்து பாலாஜியுடன் வசித்து வந்துள்ளாா்.

கடந்த 18-ஆம் தேதி தனது கடையின் அருகே பாலாஜி நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலா் பாலாஜியை வெட்டிவிட்டு தப்பினா். பலத்த காயமடைந்த பாலாஜி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது செந்தில், அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் செந்தில், சரவணன், சீனிவாசன் ஆகிய 3 பேரைக் கைது செய்து, அவா்கள் மீது கொலை வழக்குப் பதிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.