மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

மதுரையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தில் மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:24 pm

மதுரையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தில் தோட்டக் கலைத் துறை சாா்பில் 2,500-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தோட்டக் கலைத் துறை சாா்பில் பழங்கள், காய்கறிகள், பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, கோரிப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தில் 2,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ‘100 சதவீதம் வாக்களிப்போம்’, ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’, ‘வாக்களிப்பது நமது கடமை’ போன்ற முழக்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வருகிற 23-ஆம் தேதி பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் அனைத்து வாக்காளா்களும் கலந்து கொண்டு 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த நிகழ்வில் துணை இயக்குநா் (வேளாண் துறை) முருகேசன், துணை இயக்குநா் (தோட்டக் கலைத் துறை) பிரபா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.