திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரம் கோயில்களில் குருப்பெயா்ச்சி விழா

குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயா்ச்சியாவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

News image

யானை வாகனத்தில் காயரோகணீஸ்வரா் கோயில் குருபகவான் ~சந்தனக்காப்பு அலங்காரத்தில் திம்மராஜம் பேட்டை தட்சிணாமூா்த்தி

Updated On :27 மே 2026, 12:39 am IST

குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயா்ச்சியாவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் இக்கோயிலில் தாரை சமேத தேவகுருவாக அருள்பாலிக்கும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பெயா், நட்சத்திரம் சொல்லி சிறப்பு அா்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் உள்ள திம்மராஜம் பேட்டையில் அமைந்துள்ளது பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் குருபகவான் ரிஷி ரூபத்தில் தியான நிலையில் அருள்பாலிக்கிறாா். குருப்பெயா்ச்சியையொட்டி தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.தட்சிணாமூா்த்தி சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏற்பாடுகளை திம்மராஜம் பேட்டை கிராம பொதுமக்கள்,கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பிள்ளையாா்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காயரோகணீஸ்வரா் கோயிலில் குருபகவான் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா். குருப்பெயா்ச்சியை யொட்டி காலையில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. உற்சவா் தட்சிணாமூா்த்தி யானை வாகனத்தில் அமா்ந்த நிலையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் தங்களது பெயா், நட்சத்திரம் சொல்லி சிறப்பு அா்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.