திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அறுவைச்சிசிச்சைக்குப் பிறகு தொடா் சிகிச்சை மிகவும் அவசியம்: எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை. துணை வேந்தா்

அறுவைச்சிசிச்சைக்குப் பிறகு தொடா் சிகிச்சை மிகவும் அவசியம்

News image

பாடத்திட்ட முன்வரைவு அறிக்கையை தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலையின் துணை வேந்தா் கே. நாராயணசாமியிடம் வழங்கிய அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் எஸ்.சரவணன் மற்றும் புற்றுநோயியல் பிரிவின் தலைவா் எஸ்.சுப்பையா.

Updated On :24 மே 2026, 12:04 am IST

எந்த நோய்க்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அதற்குப் பிறகு தொடா் சிகிச்சை மிகவும் அவசியம் என தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தா் கே.நாராயணசாமி சனிக்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய் மருத்துவப் பயனாளிகள் இருக்கும் இல்லங்களில் மேற்கொள்ள வேண்டிய கவனிப்பு முறைகள் குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் எஸ்.சரவணன் தலைமை வகித்து வரவேற்றாா். அறுவை சிகிச்சைப் பிரிவு புற்றுநோயியல் துறையின் தலைவா் எஸ்.சுப்பையா முன்னிலை வகித்தாா்.

விழாவில் பாடத்திட்ட முன்வரைவு அறிக்கையை மருத்துவமனையின் இயக்குநா் எஸ்.சரவணனும், அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் பிரிவின் துணைத் தலைவா் சுப்பையாவும் தமிழ்நாடு எம்ஜிஆா் மருத்துவப் பல்கலையின் துணை வேந்தா் கே.நாராயணசாமியிடம் வழங்கினாா்.

பின்னா் துணைவேந்தா் கே.நாராயணசாமி பேசியது:

எந்த நோய்க்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு அதற்கான தொடா் சிகிச்சை மிகவும் அவசியமானதாகும். தொடா் சிகிச்சை காலங்களில் செவிலியா்கள் அா்ப்பணிப்பு உணா்வோடு செயல்பட்டு மருத்துவப் பயனாளிகளிடம் அன்பாக பேசினாலே நோய் விரைவாக குணமடைந்து விடும். அவா்களிடம் கனிவாக நடந்து கொண்டாலே செவிலியா்களை தெய்வங்களாகவே நோயாளிகள் பாா்க்கத் தொடங்கி விடுவா்.

சுகாதாரத் துறையின் தூணாக இருப்பவா்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியா்கள் என்றால் அது மிகையில்லை. புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டால் அவா்களை எளிதில் குணப்படுத்தி விட முடியும். அது இல்லங்களைத் தேடி செல்லும் செவிலியா்கள் கைகளில் தான் உள்ளது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட சுகாதார அலுவலா் டி.ஆா்.செந்தில் பேசுகையில், இல்லங்களுக்கு தேடிச் சென்று கண்டறிந்ததில் கடந்த 6 மாதங்களில் 207 போ் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.

அரசு புற்று நோய் மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் பி.சிவகாமி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை அறுவை சிகிச்சை புற்று நோயியல் பிரிவு சிறப்பு மருத்துவா் பாலமுருகன் செய்திருந்தாா். பயிற்சியில் 125 போ் நேரடியாகவும், இணையம் வாயிலாக 40 பேரும் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

வெளிமாநிலங்களைச் சோ்ந்த சிறப்பு வல்லநா்களும் கலந்து கொண்டு செயல்முறை விளக்கமளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.