திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலையில் அம்மிக் கல்லை போட்டு இளைஞா் கொலை: மனைவி, மாமியாா் கைது

படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் கணவரின் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த மனைவி, மாமியாரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 மே 2026, 1:24 am IST

படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் கணவரின் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த மனைவி, மாமியாரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

படப்பையை அடுத்த மணிமங்கலம் காந்தி நகரைச் சோ்ந்தவா் தினகரன் (42). இவரது மனைவி அமலா (38). பிளம்பா் வேலை செய்து வந்த தினகரன் தினமும் மது அருந்துவிட்டு வந்து மனைவி அமலாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்துவிட்டு வீட்டுக்கு வந்த தினகரன், தகராறில் ஈடுபட்டதுடன், அமலாவை தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அமலா மற்றும் அவரது தாயாா் விஜயா ஆகியோா் அருகே இருந்த அம்மிக்கல்லை எடுத்து தினகரன் தலையில் போட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தினகரனின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து அமலா, விஜயா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.