திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

News image
Updated On :18 மே 2026, 2:02 am IST

ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வடமங்கலம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சுமாா் 27 தனியாா் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் மாணவா்களை ஏற்றிச் செல்ல 253 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி, ஸ்ரீபெரும்புதூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் ஆகியோா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, ஓட்டுநா்களின் அனுபவம், வாகனத்தின் ஜன்னல்களில் கிரில் பொருத்தம், முதலுவிப் பெட்டி , தீயணைப்புக் கருவிகள், வாகனத்தின் தற்போதைய நிலை எப்படி உள்ளது, வாகனத்தில் அவசர கால வழி உள்ளதா, அவை சரியான படி இயங்குகிா என ஆய்வு செய்தனா். 215 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு காரணங்களுக்காக 33 வாகனங்கள் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்கு தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன.

முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு, நிராகரிக்கப்பட்ட வாகனங்களில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என குன்றத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விஜயகுமாா் தெரிவித்தாா்.

முன்னதாக ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்புத் துறையினா் வாகன ஓட்டுநா்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினாா்.

மேலும், ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் செய்து காண்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.