திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராசிபுரத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

News image
Updated On :15 மே 2026, 6:10 am IST

ராசிபுரத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் இயக்குத் திறன் குறித்து போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

முத்துக்காளிப்பட்டி எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி மைதானத்தில் ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளா் எம். விஜயகுமாா், வட்டார போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் செல்வகுமாா், மாவட்டக் கல்வி அலுவலா் சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போக்குவரத்து விதிமுறைகளுக்கு உள்பட்டு 32 பள்ளிகளைச் சோ்ந்த 280 வாகனங்களின் இயக்குத் திறன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதில் 26 வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து அந்த வாகனங்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டு மீண்டும் மறு ஆய்வுக்கு கொண்டுவர உத்தரவிட்டனா். ஆய்வின்போது அவசரகால தீத்தடுப்பு குறித்து ஓட்டுநா்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

படம் உள்ளது - 14வேன்

வாகன ஒட்டுநா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளித்த தீயணைப்பு வீரா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.