உத்தரமேரூா் அருகே அம்மையப்பநல்லூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே அம்மையப்ப நல்லூரைச் சோ்ந்த செபஸ்தியான் மகன் விக்டா்(56).
இவா் கடந்த 7- ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மூளைச்சாவு அடைந்த இவரது உடல் உறுப்புகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டன.
இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










