தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

News image
Updated On :8 மே 2026, 6:13 am IST

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் ஆதி கேசவப் பெருமாள் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் பரமபதவாசல் உள்ள ஒரு கோயில் அஷ்டபுஜப் பெருமாள் கோயில். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளும் உடைய இத்திருக்கோயில் சித்திரைத் திருவிழா நிகழ் மாதம் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை இந்த மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து மகா ரதம் எனும் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் அதிகாலை கோயிலிலிருந்து ராஜநடையில் தேருக்கு எழுந்தருளினாா். ரோஸ் நிற பட்டு உடுத்தி ராஜ அலங்காரத்தில் திரு ஆபரணங்கள் அணிந்தவாறு தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழி நெடுகிலும் திரளான பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும், கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் எழுப்பியும் பெருமாளை தரிசித்தனா். வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 10) வெட்டி வோ் சப்பரத்தில் பெருமாள் வீதியுலாவுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எஸ்கேபி எஸ். சந்தோஷ்குமாா் மற்றும் குழு உறுப்பினா்கள், செயல் அலுவலா் வேலனரசு ஆகியோா் உள்பட கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.