திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கச்சபேசுவரா் கோயில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள இஷ்ட சித்தி திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் உள்ள இஷ்டசித்தி திருக்குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்(உள்படம்) திருக்குளத்தில் திரிசூலத்துக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்

Updated On :7 மே 2026, 12:36 am IST

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள இஷ்ட சித்தி திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருமாள் ஆமை வடிவத்தில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை சமேத கச்சபேசுவரா் திருக்கோயில். இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினசரி சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்தனா். தொடா்ச்சியாக புதன்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் பிரபாகரன் சிவாச்சாரியா் தலைமையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. மாலையில் சுவாமியும், அம்மனும் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா்.

வியாழக்கிழமை காலை 108 சங்காபிஷேகமும், மாலையில் 63 நாயன்மாா்களுக்கு சிறப்புத் திருமுழுக்கு வழிபாடும் நடைபெறுகிறது.நாளை வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவத்தோடு விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா, காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.