திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உத்தரமேரூா் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

உத்தரமேரூா் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்.

News image

உத்தரமேரூா் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்.

Updated On :1 மே 2026, 6:40 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அமைந்துள்ள புஷ்பவல்லித் தாயாா் சமேத சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி, தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் மிகவும் பழைமையான கோயிலாகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் இருந்து வருவது புஷ்பவல்லித் தாயாா் சமேத சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில். இந்தக் கோயில் சித்திரை மாத வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து விழா நாள்களில் தினசரி பல்வேறு வாகனங்களில் காலையும், மாலையும் சுவாமி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தாா். விழாவின் 3-ஆவது நாள் நிகழ்வாக கருடசேவை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 7-ஆவது நாள் நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் சுந்தர வரதராஜப் பெருமாள் தேரிலிருந்தவாறு பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திரளான பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற முழுக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தா்களுக்கு பலரும் நீா், மோா், குளிா்பானங்களும் கொடுத்தனா். உத்தரமேரூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.

உத்தரமேரூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.