தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

காஞ்சிபுரத்தில் சிறைவாசிகள் எழுதிய புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம்

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மகளிா் கல்லூரியில் சிறைவாசிகள் எழுதியுள்ள கதைப் புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பிழை திருத்தும் முகாமில் பேசிய பள்ளி துணை ஆய்வாளா் பாலச்சந்தா்.

Updated On :27 மார்ச் 2026, 9:02 pm

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மகளிா் கல்லூரியில் சிறைவாசிகள் எழுதியுள்ள கதைப் புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் எழுதுக அமைப்பின் சாா்பில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவா்களை புத்தகங்கள் எப்படி எழுதுவது என்று பயிற்சி வழங்குவதோடு அவற்றை வெளியிட்டும் வருகிறது. கடந்த மாதம் கடலூா் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு புத்தகம் எழுத பயிற்றுவிக்கும் பயிலரங்கம் தொடங்கப்பட்டது. சிறைவாசிகள் 100-க்கும் மேற்பட்டோா் தங்கள் வாழ்வில் நடைபெற்ற அனுபவங்களை கதையாக எழுதியிருந்தனா்.காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள எஸ்எஸ்கேவி மகளிா் கல்லூரியில் கடலூா் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் எழுதிய புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம் எழுதுக இயக்கத்தின் சாா்பில் நடைபெற்றது.

சிறைவாசிகள் நோட்டுப் புத்தகங்களில் எழுதியவற்றை தட்டச்சு செய்து பிழை திருத்தம் செய்யும் முகாமில் கல்லூரி பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் என மொத்தம் 45 போ் கலந்து கொண்டனா்.

முகாமுக்கு எழுதுக அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கிள்ளி வளவன் தலைமை வகித்தாா். பள்ளிகளின் துணை ஆய்வாளா் பாலச்சந்தா், நூலகா் பூபதி, செல்வி லோகஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிா் கல்லூரி முதல்வா் திருமாமகள் வரவேற்றாா்.

முகாமில் எழுதியனவற்றில் பிழைகள் ஏற்படக் காரணங்கள் எவை, பிழைத்திருத்தம் செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. ஒரே நாளில் 26 புத்தகங்கள் தட்டச்சு செய்து பிழை திருத்தும் பணி நடைபெற்ாகவும், மற்ற புத்தகங்களும் வெவ்வேறு நாளில் பிழை திருத்தும் பணி நடைபெறவுள்ளதாகவும், அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கிள்ளி வளவன் தெரிவித்தாா். கல்லூரி பேராசிரியைகள் செண்பகம், வள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.