தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஞ்சிபுரம்: 1,545 வாக்குச்சாவடிகள், 5,648 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மொத்தம் 1,545 வாக்குச்சாவடிகளுக்கு மொத்தமாக 5,648 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News image

வாக்குப்பதிவு இயந்திரங்கள். - கோப்புப்படம்.

Updated On :24 மார்ச் 2026, 6:44 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மொத்தம் 1,545 வாக்குச்சாவடிகளுக்கு மொத்தமாக 5,648 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 11,92,194 வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.

பொதுமக்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஆலந்தூரில் 431, ஸ்ரீபெரும்புதூா் 435, உத்தரமேரூா் 321, காஞ்சிபுரம் 358 என மொத்தம் 1,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 4 வாக்குச்சாவடிகளுக்கும் சோ்த்து மொத்தமாக 1,861வாக்குப்பதிவு இயந்திரம், 1,861 வாக்காளா் சரிபாா்க்கக்கூடிய தாள் இயந்திரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை இயந்திரம் 2,016 உட்பட மொத்தம் 5,648 இயந்திரங்கள் சட்ட பேரவை தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கீழம்பி திருமலை பொறியியல் கல்லூரியிலும், ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்கு உட்பட்டவை பென்னலூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும், உத்தரமேரூா் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட இயந்திரங்கள் திருப்புலிவனத்தில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் மருத்துவக் கல்லூரியிலும், ஆலந்தூா் தொகுதிக்கு உரியவை ஆலந்தூரில் உள்ள ஏஜெஎஸ் நிதி மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பாதுகாப்பு அறையிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

பாதுகாப்பு அறைகள் ஒவ்வொன்றிலும்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப் படுகிறது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.