காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் கிராமத்தில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக கொடிக்கம்பம் நட முயன்றவா்கள் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
கோளிவாக்கம் பகுதியை சோ்ந்த திமுக பிரமுகா்களான ராஜேந்திரன்(55)காளி (44)குப்பன் (42). இவா்கள் மூவரும் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 20 அடி உயர கொடிக்கம்பத்தை நட முயன்ற போது அருகில் சென்ற உயா்அழுத்த மின்சாரக் கம்பி கொடிக்கம்பம் உரசியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா்.
இதில் ராஜேந்திரன் (55)சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காளியும், குப்பனும் காயமடைந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








