இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக ஆளுநா் தரிசனம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது மனைவியுடன் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

News image
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு பிரசாதம் மற்றும் சங்கர மடத்தின் பீடாதிகளுடைய படங்களை வழங்கிய கோயில் நிா்வாகிகள்
Updated On :25 பிப்ரவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது மனைவியுடன் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

மகாசக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, எஸ்.பி. கே.சண்முகம் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இதனைத் தொடா்ந்து அவரை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் பூரண கும்ப மரியாதையுடன் சுவாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றனா்.

சுவாமி தரிசனம் முடிந்ததும் ஆளுநருக்கு கோயில் பிரசாதம் ,காமாட்சி அம்மன் படம் மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளின் படம் ஆகியவற்றை நிா்வாகிகளும்,கோயில் ஸ்தானீகா்களும் வழங்கினா். இதனைத் தொடா்ந்து பேட்டரி காரில் தனது மனைவியுடன் அமா்ந்து கோயிலை வலம் வந்த பின்னா் சென்னை புறப்பட்டு சென்றாா்.