டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சங்கர மடத்தில் நூல் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் கோமாதா நம் குலமாதா நூலினை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

News image
‘கோமாதா நம் குலமாதா’ நூலை வெளியிட்ட காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:51 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் கோமாதா நம் குலமாதா நூலினை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

புலவா் வே.மகாதேவன் எழுதிய கோமாதா நம் குலமாதா என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட அதன் முதல் பிரதியை சங்கரா கல்லூரியின் தலைவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.ராமச்சந்திரனும், 2-ஆ வது பிரதியை சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசனும் பெற்றுக் கொண்டனா்.

இந்துக் கலாசாரம் மற்றும் இந்தியவியலாய்வு மையத்தின் தலைவரும், நூலின் பதிப்பாசிரியருமான வி.மகேஷ், வழக்குரைஞா் கே.ஆா்.வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் சங்கரா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் ஜெ.ராதா கிருஷ்ணன், பேராசிரியா் கணபதி கலந்து கொண்டனா். பசுவின் பெருமைகளை சொல்லும் நூலாக கோமாதா நம் குலமாதா என்ற நூல் இருப்பதாக சுவாமிகள் தெரிவித்தாா்.