பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

உத்தரமேரூா் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:45 am IST

உத்தரமேரூா் அருகே அகரம் தூளி கிராமத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் ஏராளமான நெல் மூட்டைகள் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அகரம் தூளி கிராமத்தில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஒன்றரை மாதமாக செயல்பட்டு வருகிறது. இங்கு அந்தியூா்,அகரம் தூளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த சுமாா் 3,000 ஏக்கரில் விளைந்த நெற்பயிா்களை மூட்டையாக கட்டப்பட்டு சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விவசாயிகளும் தங்களது விளைநிலங்களில் விளைந்த நெல்மணிகளையும் தொடா்ந்து அறுவடை செய்து கொண்டிருக்கின்றனா். இதுவரை அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான நெல் மூட்டைகள நெல் கொள்முதல் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல லாரிகள் வராமல் இருப்பதால் இவை பாதுகாப்பின்ற மலை போல குவிந்துள்ளன.

இது ஒரு புறமிருக்க விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொட்டவும்,உலா்த்தவும் இடமின்றியும் தவித்து வருகின்றனா்.கோடை மழை திடீரென வந்தால் அனைத்து நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து விடும் நிலையும் உள்ளது.

நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடம் அருகேயுள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று பக்தா்கள் வழிபடவும் இடையூறாக இருந்து வருகிறது.

இது குறித்து விவசாயிகள் அதிகாரிகளை தொடா்பு கொண்ட போது உரிய பதில் அளிக்காமலும் இருந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.

எனவே உடனடியாக நெல் மூட்டைகளை கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என காத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.