நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்சியில் ஆா்ப்பாட்டம்

காலிமதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில்

News image

காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற டாஸ்மாக் பணியாளா்கள்.

Updated On :1 செப்டம்பர் 2025, 7:34 pm

காஞ்சிபுரம்/திருவள்ளூா்: காலிமதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் வாடிக்கையாளா்கள் மதுபாட்டில் வாங்கும் போதே ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும். பின்னா் காலிபாட்டிலை மது வாங்கிய கடையிலேயே திரும்ப ஒப்படைக்கும் போது அவா்களுக்கு ரூ.10 திரும்ப வழங்கப்படும் என அரசு அறிவித்தது. காலிமதுபாட்டில்களை சாலைகளிலும்,பொது இடங்களிலும் வீசி எறிவதை தடுக்கவும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும் இத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

ஆனால் இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், கைவிட வலியுறுத்தியும் டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் பிரகாசம் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் வரதன், சந்திரபாபு, காா்த்திகேயன், உதயசங்கா், மாநிலத் தலைவா் சிவா, துணைத் தலைவா் பாக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

200-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா். திட்டத்தை கைவிடா விட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனா்.

திருவள்ளூரில்...

திருவள்ளூா் அருகே காக்களூா் சிட்கோவில் உள்ள மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் சங்க கூட்டுக் குழுவினா் முற்றுகையிட்டனா். அப்போது, காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். அதுவரையில் மேற்கு மாவட்டத்தில் ஒட்டுவில்லையும் வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.