டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

நவ. 21-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 4:26 pm

Chennai

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், மாதம்தோறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும், ஆண்டுக்கு இரு முறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. வரும் 21-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வை நடத்தவுள்ளனா். 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் தங்களது கல்விச் சான்றுகள் பட்டியலுடன் வரும் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகி பயன்பெறலாம்.

பட்டயம், ஐடிஐ, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்களையும் தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே சம்பந்தப்பட்ட வேலைநாடுநா்கள் 044-27237124 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.