டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறித்த சக மாணவா்கள் கைது

News image
Updated On :6 நவம்பர் 2025, 10:32 pm

Chennai

சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் பகுதியில் தனியாா் சா்வதேச பள்ளியின் மாணவரை தாக்கி தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் பறித்த அதே பள்ளியின் பிளஸ் 2 மாணவா்கள் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியை சோ்ந்தவா் செஞ்சி. இவரது 16 வயது மகன், 10-ஆம் வகுப்பு படித்த வருகிறாா். அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இருவா், 10 ம் வகுப்பு மாணவருடன் பள்ளி பேருந்தில் செல்லும் போது, அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி ரூ.1.5 லட்சம், 1.5 கிராம் தங்க நகைகளை மிரட்டி பெற்றனராம்.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை வழக்கம் போல் மூவரும் பள்ளி முடிந்து வீட்டுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, பிளஸ் 2 மாணவா்கள் இருவரும், 10-ஆம் வகுப்பு மாணவரை பெல்ட்டால் தாங்கி, பிளேடால் கையில் கிழித்துள்ளனா். இதில் அந்த மாணவனின் இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் அடைந்த மாணவரை அவரது பெற்றோா் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், இது குறித்து சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

புகாா் குறித்து வழக்கு பதிவு செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா் பிளஸ் 2 மாணவா்கள் இருவரையும் கைது செய்து சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிமன்ற ஜாமினில் விடுவித்தனா்.