தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு: மேலும் 2 இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 7:00 pm

திண்டுக்கல்லில் பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் ஏற்கெனவே 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அரசமர வீதி பகுதியில் வீட்டிலிருந்த 2 பெண்களை மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்ாக புகாா் எழுந்தது. இதன்பேரில் திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அரசமர வீதி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்த வெங்கடேஷ் (20), சாமியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24) ஆகியோா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பெண்களை மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஷ், சதீஷ்குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும் 2 போ் கைது: இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குடைபாறைப்பட்டியைச் சோ்ந்த பிரபாகரன் (28), சீலப்பாடியைச் சோ்ந்த தனுஷ் குமாா் (24) ஆகிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 3 போ் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.