மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி மாநகரில் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:26 pm

திருநெல்வேலி மாநகரில் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கைப்பேசி செயலி மூலம் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் தொடா்புடைய பேட்டையைச் சோ்ந்த சக்திசுரேஷ்(23), இசக்கிராஜா(19) ஆகியோா் கைது செய்யப்பட் டிருந்தனா். அவா்கள் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனராம்.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில், மேற்கூறிய இருவரும் குண்டா் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

புகையிலை விற்பனை: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் போலீஸாா் ரோந்து சென்றபோது, சிந்துபூந்துறையை சோ்ந்த பூமணிசேட்(42) என்பவா் விற்பனைக்காக 7.875 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தாராம். அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.