மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

மதுரையைச் சோ்ந்த இளைஞா் உள்பட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 6:34 pm

மதுரையைச் சோ்ந்த இளைஞா் உள்பட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மதுரை மாவட்டம், கடச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மணி சங்கா் (20). இவா், திருநெல்வேலி வட்ட காவல் சரகப் பகுதியில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா்.

அதே போல, சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிவசந்தோஷ் (19) கைது செய்யப்பட்டிருந்தாா்.

தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் இவா்கள் ஈடுபட்டு வந்ததாகக் கூறி, இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில் ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி, மேற்கூறிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.