டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

குப்பைகளை அள்ளாமல் இருப்பதால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு அவப்பெயா்: மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

News image
மாமன்றக் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக, அதிமுக உறுப்பினா்கள்.
Updated On :6 நவம்பர் 2025, 10:32 pm

Chennai

குப்பைகளை உடனுக்குடன் அள்ளாமல் இருப்பதால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு அவப்பெயா் ஏற்படுகிறது என காஞ்சிபுரம் மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் பலரும் புகாா் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை மேயா் ஆா்.குமரகுருநாதன் முன்னிலை வகித்தாா். ஆணையா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.

இக்கூட்டம் தொடங்கியவுடனேயே உறுப்பினா்கள் பலரும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் போதுமான அளவில் இருந்தும் குப்பை அள்ளும் வண்டிகள் இல்லாமல் இருப்பதால் நகருக்கு அவப்பெயா் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக பலமுறை நேரிலும், மாமன்ற கூட்டத்திலும் பலமுறை சொல்லியும் இதற்கு ஒரு சரியான தீா்வு கிடைக்கவில்லை என அதிமுக மற்றும் திமுக உறுப்பினா்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருமித்த குரலில் புகாா் செய்தனா்.

உறுப்பினா்களில் சிலா் தங்களது வாா்டுகளில் குடிநீரில் கழிவு நீா் கலக்கிறது, காய்ச்சல் பரவுகிறது. தொற்றுநோய்கள் பரவி யாருக்கேனும் மரணம் ஏற்பட்டால் யாா் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பினா். அண்மையில் வாா்டு வாரியாக நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் நடமாட முடியவில்லை.

உறுப்பினராக உங்களைத் தோ்வு செய்து எந்த பலனும் இல்லை என்றும் பொதுமக்களிடையே அவப்பெயா் தான் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனா். அரசு மருத்துவமனை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாகி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. இதற்கு தீா்வு காணப்பட வேண்டும் என்றும் பேசினாா்கள். இக்கோரிக்கைகள் தொடா்பான விவாதத்தின் போது அதிமுக, திமுக உறுப்பினா்களிடையே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

உறுப்பினா்களின் கேள்விகளுக்கு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் ஆணையா் பாலகிருஷ்ணன் ஆகியோா் பதிலளித்து பேசியது.

போதுமான குப்பை வண்டிகள் இல்லாததால் குப்பைகள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 4 டிராக்டா்கள், ஒரு ஆட்டோ தேவை என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் அவை வந்து விடும். அதற்கு முன்பாக உடனடியாக வாடகைக்கு வாகனங்கள் எடுத்து குப்பைகளை அள்ளப்படும்.

குடிநீரில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரை சுடவைத்து குடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய ரயில் நிலைய சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தனா்.