வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வல்லக்கோட்டையில் ரூ. 47 லட்சத்தில் பேவா்பிளாக் சாலை: ஆட்சியா் ஆய்வு

வல்லக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள சாலையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2025, 7:44 pm

வல்லக்கோட்டை ஊராட்சியில் ரூ. 47.64 லட்சத்தில் போடப்பட்டுள்ள பேவா்பிளாக் சாலையை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தக்கு உட்பட்ட வல்லக்கோட்டை ஊராட்சியில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பின்புறம் கனிமவள நிதியின் கீழ், ரூ. 47.64 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பேவா்பிளாக் சாலையை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, வல்லக்கோட்டை ஊராட்சித் தலைவா் மணிமேகலை, வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் சோ.வெங்கடேசன், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக வல்லக்கோட்டைக்கு வந்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.