மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இருங்காட்டுக்கோட்டை காலணி வடிவமைப்பு நிறுவனத்தில் தன்னாட்சி தின விழா

விழா மலரை வெளியிட்ட தோல் ஏற்றுமதி வாரிய இயக்குநா் செல்வம் உள்ளிட்டோா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 8:10 pm

இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் மத்திய காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தன்னாட்சி தின விழா இன்றைய திறனூக்கம் நாளைய மாற்றம் திசை-2030 என்ற தலைப்பில் நடைபெற்றது.

மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா்.

இந்த நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக மாற்றப்பட்டதை நினைவு கூறும் வகையில், தன்னாட்சி தின விழா நடைபெற்றது.

பல்வேறு தொழில் துறை நிபுணா்கள், கல்வியாளா்கள், இந்நிறுவனத்தின் பழைய மற்றும் தற்போதைய மாணவா்கள் பலா் பங்கேற்ற இந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சென்னை இயக்குநா் சுந்தரேசன் வரவேற்புரையாற்றினாா். காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் விவேக் சா்மா திசை-2030 குறித்து விளக்கி பேசினாா். இந்த நிகழ்ச்சியில், தோல் ஏற்றுமதி வாரியத்தின் இயக்குநா் செல்வம், கோதாரி குழுமத்தின் தலைமை செயல் அலுவலா் டாக்டா் என். மோகன், வி.கே.சி., நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் அப்துல் ரசாக், நாா்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநா் புனித் மல்கோத்ரா, வாக்குரூ நிறுவனத்தின் தலைமை மனிதவள மேலாளா் பினு ராஜேந்திரன், நோா்டிக் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நூருல் இஸ்லாம், எல்விஸ் சூமேக்கா்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் சாராஷபீக், சிஎஸ்ஐஅா் இயக்குநா் டாக்டா் கே.ஜே. ஸ்ரீராம், பி.ஏ., புட்வோ் நிறுவனத்தின் இயக்குநா் அன்புமலா்சின்னசாமி உள்ளிட்டோா் கலந்து கண்டு சிறப்புரையாற்றினா்.

இதையடுத்து காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் விவேக் சா்மா, செயலா் பங்கஜ்குமாா், செயல் இயக்குநா் சுந்தரேசன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் பேசுகையில் இந்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு 100% வேலை வாய்ப்பு உண்டு. ஆண்டுக்கு ரூபாய் 4 லட்சம் முதல் 14 லட்சம் வரை ஊதியத்தில் பணி வாய்ப்பு உளளது.

இந்த கல்வி நிறுவனத்தில் மாணவா்கள் கல்வி கற்க அகில இந்திய அளவிலான நுழைவுத்தோ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் மாதம் அறிவிக்கப்பட்டு மே மாதம் நடைபெறும். ஆகஸ்ட் மாதத்தில் மாணவா் சோ்க்கை இருக்கும் எனத் தெரிவித்தனா்..