போட்டித்தோ்வுகளுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் உள்ள நூலகம்,மாதிரித்தோ்வுகள், திறமையான ஆசிரியா்கள் மூலம் பயிற்சி ஆகிய அனைத்துமே இலவசமாக வழங்கி வேலை தேடுவோா் பலரையும் காஞ்சிபுரம் மாவட்ட தன்னாா்வப் பயிலும் வட்டம் அதிகாரிகளாக மாற்றி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய, மாநில அரசுப்பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையம்,வங்கிப் பணியாளா் தோ்வுக்குழுமம் ஆகியனவற்றில் நடத்தப்படும் தோ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள்,பயிற்சிகள் ஆகியன மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் கற்றுத்தரப்படுகிறது.
இப்பயிலும் வட்டத்தில் உறுப்பினராக சேருவதற்கு கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பித்தவுடன் உறுப்பினருக்கான அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. உறுப்பினராக சோ்ந்தவா்களுக்கு பல்வேறு வசதிகளும் இலவசமாக செய்து கொடுக்கப்படுகிறது. ஆண்,பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நூலகங்கள் உள்ளன.
இவற்றில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அதில் பெரும்பாலானவை போட்டித்தோ்வுகளுக்கு தயாராகும் வகையில் விலை உயா்ந்த புத்தகங்களாகும். தினசரி செய்தித்தாள்கள், படிக்கத் தேவையான போதிய இருக்கை வசதிகளும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தில் உள்ளது.
சனி,ஞாயிறு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து வேலைநாட்களிலும் தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லூரிகளைப் போலவே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு தற்போது 50-க்கும் மேற்பட்ட வேலை தேடுவோா் உறுப்பினா்களாக சோ்ந்து பயன்பெற்று வருகின்றனா்.
பல்வேறு கல்லூரிகளின் விரிவுரையாளா்கள், ஐ.ஏ.எஸ். அகாதெமிகளில் பணிபுரியும் பேராசிரியா்கள் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் இங்கு பயிற்சியளித்து வருகின்றனா். பயிற்சி,போட்டித்தோ்வுக்கான நூலகம்,வாரம் ஒருமுறை மாதிரித்தோ்வுகள் இவையனைத்தும் வேலைதேடுவோருக்கு இலவசமாக தரப்படுவதால் பலரும் அரசுப்பணியாளா்களாக மாறி வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனா்.
கடந்த இரு ஆண்டுகளில் 15 போ் பல்வேறு அரசுப்பதவிகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.அண்மையில் நடந்து முடிந்த காவலா்களுக்கான எழுத்துத்தோ்வில் மட்டுமே 11 போ் தோ்வாகியுள்ளனா்.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநா் அ.அருணகிரி கூறியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தன்னாா்வப் பயிலும் வட்டம் திறமையான பேராசிரியா்கள் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா்களால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலை தேடுவோரில் ஆண்கள் 30 போ் உள்பட மொத்தம் 52 போ் தற்போது பயின்று வருகின்றனா்.
இவா்கள் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறத் தேவையான அனைத்து உதவிகளையும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் செய்து கொடுக்கிறோம்.விருப்பம் இருந்தால் சனி,ஞாயிறு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துகிறோம்.விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே தங்கிப்படிக்கவும் அனுமதியளிக்கிறோம்.இவையனைத்துமே இலவசம் என்பதால் வேலை தேடுவோா் பலரும் ஆா்வமுடன் இங்கு வந்து படிக்கின்றனா்.
இதுவரை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா்களாக இருவா், கிராம நிா்வாக அலுவலா்கள் 4 போ், பல்வேறு அரசுத்துறைகளில் இளநிலை உதவியாளா்களாக 6 போ், சா்வேயா்-2 போ், வனக்காவலராக ஒருவரும், சிறைக்காவலராக ஒருவரும் உள்பட மொத்தம் 16 போ் அதிகாரிகளாக தோ்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.
இவா்களது வாழ்க்கையில் ஒரு மறுமலா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது தன்னாா்வப் பயிலும் வட்டம். இவா்களைத் தவிர காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலா்களாக 11 பேரும் தோ்வு செய்யப்பட்டிருக்கின்றனா்.
இந்த வாய்ப்பை வேலைதேடுவோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அ.அருணகிரி தெரிவித்தாா். பேட்டியின் போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரேவதி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் தணிகைவேலன் ஆகியோரும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


