திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘நீா்வழி கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தவிக்க வேண்டும்’ - சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

News image

சென்னை அடையாறு முகத்துவாரத்தில் எம்ஜிஆா் கால்வாய் கலக்கும் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்.

Updated On :29 மே 2026, 4:39 am IST

நீா்வழி கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள், கழிவுகளைக் கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பருவ மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுமக்களை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், நீா்வழிக் கால்வாய்களைத் தூா்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல், தடுப்புச் சுவா் கட்டுதல் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் எம்.ஜி.ஆா். கால்வாய், ஜாபா்கான்பேட்டை கால்வாய் மற்றும் அடையாறு முகத்துவாரப் பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது தூா்வாரும் பணிகளை பருவ மழை தொடங்குவதற்கு முன்பே முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது பொதுமக்களிடம் பேசிய ஆணையா், நீா்வழி கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள், கழிவுகளை கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும் தினமும் குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளரிடம் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.