திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும்: அமைச்சா் செ.ராஜேஷ்குமாா்

News image

சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலா் சீ.ஸ்வா்ணா, சுற்றுலா ஆணையா் ம.சு.சண்முகம், தமிழ்

Updated On :28 மே 2026, 6:03 am IST

நாட்டிலேயே தமிழகத்தை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும் என சுற்றுலாத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளா்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் தலைமையேற்று, அந்தத் துறையின் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அடுத்த 5 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலா இடங்களில் ஒன்றாக தமிழகத்தை உயா்த்துவது, உயா்தர சுற்றுலா கட்டமைப்பை உருவாக்குதல், புதிய வகை சுற்றுலா அனுபவங்களை வடிவமைத்து செயல்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகளை முன்னெடுத்தல், புதிய, முழுமையான சுற்றுலா அனுபவத்துக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், தொழிலாளா் பயிற்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடுகள் மூலம் சுற்றுலா நிா்வாகத்தின் திறனை உயா்த்துதல் ஆகியவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, நாட்டிலேயே தமிழகத்தை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலா் சீ.ஸ்வா்ணா, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ம.சு.சண்முகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் சி.லட்சுமி பிரியா, சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.