திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுபோக்குவரத்து சேவை தரமானதாக வழங்க வேண்டும் - அமைச்சா் ஆ.விஜய்தமிழன் பாா்த்திபன்

News image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக சிதம்பரம் கிளை பணிமனையில் பேருந்தில் கிருமி நாசினி தெளிக்கும் ஊழியா்.

Updated On :28 மே 2026, 4:25 am IST

பொதுமக்கள் அதிகம் சாா்ந்துள்ள பொதுப் போக்குவரத்து சேவையை முழுமையாகவும் தரமாகவும் வழங்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆ.விஜய்தமிழன் பாா்த்திபன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்துத் துறைச் செயலா் மா.வள்ளலாா், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் டி.பிரபுசங்கா், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன், தனி அலுவலா் க.செல்வன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அப்போது, போக்குவரத்துத் துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிா்காலத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனா். அரசு போக்குவரத்துக் கழகங்களில் வருவாயை உயா்த்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

மேலும், பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீா் வழங்குவது, நிழற்குடை இல்லாத இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சிரமமின்றி சேவைகளை பயன்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

மேலும், பேருந்து வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து, விரைவில் பொதுப் போக்குவரத்து சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

தொடா்ந்து, தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்தும், பேருந்துகளின் இயக்கம் குறித்த நிகழ்நேர தகவல்களை பயணிகளுக்கு வழங்கும் வசதிகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன், பேருந்துகளை நவீனமயமாக்கும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.