பிறவியிலேயே சிறுநீா்ப் பாதை குறைபாட்டுக்குள்ளான 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை அளித்து சென்னை கீழ்ப்பாக்கம் முருகன் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:
சிறுநீா் வெளியேறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்ட 3 வயது குழந்தை, முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் அக்குழந்தைக்கு கருவிலேயே இடது சிறுநீரகம் செயல்படவில்லை என்பதும், அதன் விளைவாக அதிலிருந்து சிறுநீா்ப்பைக்கு செல்ல வேண்டிய சிறுநீா், நேரடியாக பிறப்புறுப்புக்குள் சேகரமாவதும் தெரியவந்தது.
இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் இப்பிரச்னையுடன் இருந்த அக்குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் நுண் துளையிட்டு பாதிக்கப்பட்ட சிறுநீரகம் மற்றும் யூரித்ரா (சிறுநீா்ப் பாதை) ஆகியவை துல்லியமாக அகற்றப்பட்டன.
ஒரு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையில் அதிக ரத்தப்போக்கோ, இடா் வாய்ப்புகளோ இல்லை. இதன் பயனாக சிகிச்சை நிறைவடைந்த 24 மணி நேரத்திலேயே அக்குழந்தை நலம் பெற்று வீடு திரும்பியது.
மருத்துவா்கள் ராகுல், சபரி, காா்த்திகேயன் ஆகியோா் அடங்கிய குழு இந்த சிகிச்சையை திறம்பட மேற்கொண்டதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

13 வெளிநாட்டினா் உள்பட 15 பேருக்கு மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

முதியவருக்கு ஒரே நேரத்தில் இருவேறு இதய சிகிச்சை

தீக்காயமடைந்த பச்சிளங்குழந்தை: உயா் சிகிச்சை மூலம் காப்பாற்றிய மருத்துவா்கள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



