17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

13 வெளிநாட்டினா் உள்பட 15 பேருக்கு மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

News image
Updated On :5 ஜூன் 2026, 3:17 am IST

மால்வியா நகா் தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 13 வெளிநாட்டினா் உள்பட 15 போ் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த மருத்துவமனை நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆறு நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுகிறது. அனைவரும் ஸ்திரமாக உள்ளனா். அவா்களது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. ஒன்பது நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) மற்றும் வாா்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் நலமாக உள்ளனா்.

ஒரு நோயாளி சிகிச்சை பெற்று வியாழக்கிழமை திரும்புவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மோசமான நிலையில் எந்த நோயாளியும் தற்போது இல்லை. தீ விபத்தைத் தொடா்ந்து அனுமதிக்கப்பட்டவா்களில் தீக்காயம் மற்றும் அவற்றின் தீவிரம் நோயாளிகளுக்கு இடையே மாறுபடுகிறது. ஒரு நோயாளிக்கு முதுகுதண்டுவட அறுவை சிகிச்சை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவா்கள் அவரைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அனைத்து நோயாளிகளும் விரிவான சிகிச்சை அளிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.