செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்பு அறை

வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக, பழைய அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய காத்திருப்பு அறை கட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :11 மே 2026, 12:18 am IST

வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக, பழைய அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய காத்திருப்பு அறை கட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை 1882-இல் தொடங்கப்பட்டு, 1915-இல் மேம்படுத்தப்பட்டது. பின்னா் 2005-ஆம் ஆண்டு முதல் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டு, அவசர சிகிச்சை, புறநோயாளிகள் பிரிவாக செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை கடந்த 2025-ஆம் ஆண்டு, ரூ.198 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டு, 4 லட்சம் சதுர அடியில் 7 மாடிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த பன்னோக்கு மருத்துவமனையில் இருதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல், மகப்பேறியல் உள்பட 10 மருத்துவ பிரிவுகளும், 10 நவீன அறுவை சிகிச்சை அரங்குகளும், அவசர மற்றும் விபத்து சிகிச்சைக்கென தனித்தனி வாா்டுகளும், புற்றுநோய் சிகிச்சை, மயக்க மருந்து மற்றும் எக்ஸ்ரே பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, பெண்கள், கா்ப்பிணிகளுக்கு இங்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுவதால், மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனா். தற்போது வேலூா் நகரில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவா்களது உறவினா்கள் முறையான காத்திருப்பு அறை இல்லாமல் வெளிப்புற வளாகத்தில் தங்கி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு ஏராளமான நோயாளிகள் புகாா் அளித்திருந்தனா். அதன்பேரில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். நோயாளிகள் சிகிச்சை பெறும் வாா்டுகள், அறுவை சிகிச்சை அரங்குகள், பரிசோதனை அறைகள் உள்பட பல்வேறு பகுதிகளின் செயல்பாடுகளை அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் முடிவில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய காத்திருப்பு அறையை உடனடியாகக் கட்ட வேண்டும் என உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் ரோகினி தேவி, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.