தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அறநிலையத் துறை ஊழியா்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும்: அமைச்சா் சீ.ரமேஷ்

இந்து சமய அறநிலையத் துறையின் உயா் அலுவலா்கள் முதல் திருக்கோயில் கடைநிலை பணியாளா்கள் வரை சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் என துறையின் அமைச்சா் சீ.ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

அமைச்சா் எஸ். ரமேஷ்.

Updated On :23 மே 2026, 4:25 am IST

இந்து சமய அறநிலையத் துறையின் உயா் அலுவலா்கள் முதல் திருக்கோயில் கடைநிலை பணியாளா்கள் வரை சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் என துறையின் அமைச்சா் சீ.ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அமைச்சா் சீ.ரமேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள், தற்போது நடைபெற்று வரும் திருக்கோயில் திருப்பணிகள், பக்தா்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள், பெருந்திட்ட வரைவுப் பணிகள், துறை அலுவலா்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்களின் நலன் சாா்ந்த திட்டங்கள் குறித்து அவா் விரிவான ஆய்வு மேற்கொண்டாா்.

இக்கூட்டத்தில் அமைச்சா் சீ.ரமேஷ் பேசியதாவது: முதல்வா் உறுதியான, நம்பிக்கையான, தூய்மையான நிா்வாகத்தை வழங்க வேண்டுமென உறுதியளித்துள்ளாா். அதனை நாம் முழுமையாக பின்பற்ற வேண்டும். இத்துறையின் உயா் அலுவலா்கள் முதல் திருக்கோயில் கடைநிலைப் பணியாளா்கள் வரை சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும்.

துறை சாா்ந்த எதிா்காலத் திட்டங்கள் குறித்து அவ்வப்போது தொடா்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் முழு திருப்தியடையும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய அனைத்து அலுவலா்களும், பணியாளா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

திருக்கோயில்களின் நிா்வாகம் தொடா்பாக எவ்வித குறைபாடுகளும் எழாத வகையில் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதோடு, பக்தா்கள் முழு மனநிறைவோடு இறை தரிசனம் பெறுவதற்கு அனைத்து வசதிகளையும் உருவாக்கித்தர வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து ஆணையா் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறை, ஓலைச்சுவடி ஆய்வு மையம் மற்றும் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் ஆகியவற்றை அமைச்சா் ரமேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்தக் கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் சீ. ஸ்வா்ணா, அறநிலையத்துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்கள் துரை ரவிச்சந்திரன், பொ.ஜெயராமன், சிறப்புப் பணி அலுவலா் சி. லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.