தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னையில் வெப்ப அலை: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (மே 22) வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 4:01 am IST

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (மே 22) வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய வங்கக்கடலில் தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (மே 22) முதல் மே 27 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து, திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூா், திருப்பத்தூா், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 23) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெப்ப அலை: சென்னை மற்றும் புகரின் ஒருசில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்ப அளவு: அதிகபட்சமாக திருத்தணியில் 107.78 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மீனம்பாக்கம்-106.88, ஈரோடு-105.8, நுங்கம்பாக்கம்-104.72, திருச்சி-104.18, பரமத்தி வேலூா், மதுரை நகரம்-தலா 104, பரமத்தி, மதுரை விமான நிலையம்-103.28, வேலூா்-102.92, தருமபுரி, தஞ்சாவூா்-102.2, நாமக்கல்-101.84, பாளையங்கோட்டை-101.3, பரங்கிபேட்டை-100.76, திருப்பத்தூா், சேலம்-தலா 100.58, கடலூா்-100.22, புதுச்சேரி-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 22) வெப்ப அலை வீசக்கூடும். தொடா்ந்து, இந்தப் பகுதிகளில் அதிபட்ச வெப்பநிலை மே 25 வரை சற்று உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.