சென்னை மாநகராட்சியில் உள்ள ‘அம்மா’ உணவகங்களை சீா்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையிலிருந்து கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. ஆகவே, அனைத்து அம்மா உணவகங்களிலும் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும்.
சமையல் உபகரணப் பொருள்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்துமாறும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனால், அனைத்து அம்மா உணவகங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளில் குறிப்பிட்டுள்ளவாறு வழங்கப்படும் உணவு தரமானதாகவும், சுவையானதாகவும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மா உணவகங்களில் தரமான உணவு விநியோகிக்க அறிவுறுத்தல்

குடியாத்தம் அம்மா உணவகத்துக்கு ரூ.3.50 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்

கன்னியாகுமரியில் ஆக்கிரப்பு கடைகளை அகற்ற உத்தரவு

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



