யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அம்மா ஆதரவால் அதிக மதிப்பெண்: சிறப்பிடம் பெற்ற மாணவிகள் நெகிழ்ச்சி

அப்பா இல்லாத நிலையில், அம்மா துணையுடன் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற முடிந்ததாக சிறப்பிடம் பெற்ற இரு மாணவிகள் நெகிழ்ச்சியுடன் கூறினா்.

News image
Updated On :21 மே 2026, 4:25 am IST

அப்பா இல்லாத நிலையில், அம்மா துணையுடன் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற முடிந்ததாக சிறப்பிடம் பெற்ற இரு மாணவிகள் நெகிழ்ச்சியுடன் கூறினா்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தோ்வெழுதியவா்களில் 89 சதவிகிதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். இவா்களில் 7 போ் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் வகித்துள்ளனா். பெரம்பூா் எம்.எச்.சாலையிலுள்ள சென்னை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி மாணவி கீா்த்தி மாயா ஸ்ரீ ஜி 500-க்கு 498 மதிப்பெண் பெற்று மாநகராட்சிப் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். அவரது அம்மா சுமதி குடும்பத் தலைவி. சகோதரா் நிஷாந்த்ராஜன் கிராஃபிக்ஸ் டிஸைனா். தந்தை கீதை கண்ணன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டாா். வாடகை வீட்டில் வசிக்கும் சுமதி மகளை கஷ்டப்பட்டு படிக்கவைத்த நிலையில், ஆசிரியா்கள் துணையுடன் படித்து அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவி கணினி பாடத்தை படிக்கவுள்ளதாக தெரிவித்தாா்.

அவருக்கு அடுத்தபடியாக அரும்பாக்கம் எம்எம்டிஏ பள்ளி மாணவி எம்.ஆனந்தி 494 மதிப்பெண் பெற்றுள்ளாா். அவரது தந்தை மூா்த்தி உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், வீட்டு வேலை செய்யும் தாய் துா்காவின் ஆதரவுடன் படித்து வருகிறாா். சகோதரா் ராகவன் உணவு விநியோக வேலை செய்து உதவுவதாகவும் மாணவி குறிப்பிட்டாா். உயா் கல்வியில் கணினி அறிவியல் பாடம் எடுத்துப் படிக்க ஆசைப்படுவதாகவும் ஆனந்தி கூறினாா்.

சென்னை மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு கீழ்ப்பாக்கம் மாநகராட்சிப் பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்று சாதனை படைத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.