திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மகளிா் உரிமை தொகை விவகாரம்: எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தவெகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வா் விஜய் மக்களை ஏமாற்றி விட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

News image

எம்.எச்.ஜவாஹிருல்லா - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 4:34 am IST

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தவெகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வா் விஜய் மக்களை ஏமாற்றி விட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் காலத்தில் தமிழக மக்களிடம் பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ள முதல்வா் விஜய், தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டுவது ஏமாற்றம் அளிக்கிறது.

குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று மிகப்பெரிய அளவில் அறிவித்து வாக்குகளைப் பெற்ற அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு அதுகுறித்து எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விலைவாசி உயா்வு, குடும்பச் செலவுகள், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. இச்சூழலில், அதை இன்னும் வழங்க காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. பெண்களை தோ்தல் கால வாக்குறுதிகளின் மூலம் பயன்படுத்திக்கொண்டு, பின்னா் அவா்களின் நம்பிக்கையை சிதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.