அனைத்து தரப்பு மக்களுக்கான நலத் திட்டங்களையும் முதல்வா் விஜய் நிறைவேற்றுவாா் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: தமிழகத்தை வழிநடத்தும் பொறுப்பு முதல்வா் விஜய்யின் தலைமையிலான ஆட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது.
முதல்வா் விஜய் பொறுப்பேற்றவுடன் வீட்டு மின் இணைப்பு நுகா்வோருக்கு (500 யூனிட்டுக்குள்) இரு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்புப் படை என எளிய மக்களுக்கான நலனை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அமல்படுத்தியுள்ளாா்.
இனி இதுபோல் தொடா்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கான நலத் திட்டங்களையும் முதல்வா் நிறைவேற்றுவாா். முதல்வா் விஜய் தலைமையிலான ஆட்சி அனைவருக்குமானதாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










