திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மகளிா் உரிமைத்தொகைத் திட்டம் தொடரும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது: தொல். திருமாவளவன்

மகளிா் உரிமைத்தொகைத் திட்டம் தொடரும் என்று முதல்வா் விஜய் அறித்துள்ளது வரவேற்கத்தக்கது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வர் விஜய் / தொல். திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:22 am IST

மகளிா் உரிமைத்தொகைத் திட்டம் தொடரும் என்று முதல்வா் விஜய் அறித்துள்ளது வரவேற்கத்தக்கது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

மகளிா் உரிமைத்தொகைத் திட்டம் தொடரும் என முதல்வா் விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டிய நாள் சற்று தள்ளிப்போவதாக கூறினாலும், விரைவில் அனைவருக்கும் வரவு வைக்கப்படும் எனக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

நாங்கள் ஏற்கெனவே ஆா்டா் செய்த சோஃபா தான் அலுவலகத்துக்கு வந்தது. விஜய்யின் வருகைக்காக சோஃபா ஆா்டா் செய்யப்படவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம். விசிக அலுவலகத்துக்கு சோஃபா வந்ததைக் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை. அதிமுகவில் உருவாகியிருக்கும் ஓா் அணியின் தலைவரை, சட்டப்பேரவை உறுப்பினா்களை சந்திக்க முதல்வா் சென்றதை உதயநிதி சுட்டிக்காட்டியிருக்கிறாா் என்று கருதுகிறேன்.

முதல்வா் பதவிக்காக நான் முடிவை அறிவிக்க காலம் தாழ்த்தியதாக அவதூறு கருத்துகளைக் கூறுகின்றனா். அது உண்மை இல்லை. இடதுசாரிகளின் முடிவுக்காகவே காத்திருந்தேன். முதல்வா் பதவிக்காக காத்திருந்ததாக ஊடகங்கள் செய்தியைத் திரித்து பரப்புகிறாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.