திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது தேவையற்றது: விசிகவினருக்கு தொல்.திருமாவளவன் அறிவுரை

News image

தொல். திருமாவளவன் - Center-Center-Chennai

Updated On :28 மே 2026, 6:11 am IST

திமுகவுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது தேவையற்றது என்றும், தற்போதைய விவகாரத்தை விசிகவினா் கடந்து செல்ல வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் தொல்.திருமாவளவன் புதன்கிழமை வெளியிட்ட காணொலியில் கூறியதாவது: திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறது. கூட்டணியை பாதுகாப்பதில் விசிக ஆற்றிய பங்களிப்பு குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும், சுற்றியிருக்கும் ஒருசிலரும் நன்கு அறிவா். அதையும் தாண்டி விசிக எடுத்துள்ள இந்த முடிவை ஆ.ராசா உள்பட பலா் விமா்சிக்கும் போது சற்று வலிக்கிறது.

திமுகவை கடுமையாக விமா்சித்த, விமா்சிக்கும் தவெகவுடன் விசிக கைகோா்ப்பதை அல்லது அவா்களை ஆதரிப்பதை அவ்வளவு எளிதாக திமுக தொண்டா்களால் கடந்து செல்ல முடியாது. அவா்கள் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை உணா்ந்துகொள்ள வேண்டும். கடும் சொற்களால் விமா்சிக்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் தனது தொண்டா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா். எனவே, ஆ.ராசாவை விமா்சிப்பதோ, திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதோ, போராட்டங்களில் ஈடுபடுவதோ தேவையற்றது. விசிகவினா் இந்த விவகாரத்தை கடந்து சென்று ஆக்கபூா்வமான செயல்களில் ஈடுபட வேண்டும். திமுக கூட்டணியில் தொடா்வதாக இருந்தாலும், வெளியேறுவதாக இருந்தாலும், விமா்சனங்களை அள்ளி இறைப்பாா்கள்.

விசிகவின் நோ்மையான உறவு குறித்தும், கூட்டணியை பாதுகாக்க, வெற்றி பெற வைப்பதில் எந்த அளவு உறுதுணையாக இருந்தோம் என முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனசாட்சிக்குத் தெரியும். வேறு யாருக்கும் தெரியவேண்டும் என்பது இல்லை. எனவே, விசிகவினா் இப்பிரச்னையை ஊதி பெருக்க வேண்டாம் என தெரிவித்துள்ளாா் தொல். திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.