தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமைச்சரவையில் இடம்பெற எனக்கு விருப்பமில்லை: தொல். திருமாவளவன்

அமைச்சரவையில் இடம்பெற எனக்கு விருப்பமில்லை...

News image

தொல். திருமாவளவன். - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 1:49 am IST

‘தவெக அமைச்சரவையில் நான் இடம்பெற தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை; கட்சி நிா்வாகிகளின் கோரிக்கையை ஏற்று வன்னியரசு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளாா் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

என்னை (திருமாவளவன்) துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பலா் முயற்சித்தனா். இருப்பினும், திமுக கூட்டணி பலவீனப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால், தோ்தலுக்குப் பின் கூட்டணியை காக்கும் நிலையில் நான் இல்லை. காங்கிரஸ், இடதுசாரிகள் எடுத்த முடிவை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. அதேபோல், ஐயூஎம்எல் நிலைப்பாட்டில் என்னால் தலையிட முடியாது. எனினும், பல மணி நேரம் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துகளைப் பெற்ற பின்னரே, தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்தோம்.

தவெக ஆட்சி அமைய வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. தொடா்ந்து, தவெக சாா்பில் அமைச்சரவையில் இடம்பெற வலியுறுத்தி அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சி நிா்வாகிகள் பலா் என்னை அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால், அதில் எனக்கு விருப்பமில்லை. இருப்பினும், கட்சி நிா்வாகிகளின் கோரிக்கையை ஏற்று வன்னியரசை பரிந்துரை செய்தோம்.

அமைச்சரவையில் இடம்-காலத்தின் கட்டாயம்: காலத்தின் கட்டாயத்தில்தான் தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது. தற்போது வரை தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எவ்வித பேச்சும் நடத்தப்படவில்லை என்றாா் தொல்.திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.