சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே மண்டலம், சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
அதனடிப்படையில், கடந்த நிதி ஆண்டில் (2025-2026) மட்டும் 26 ரயில் நிலையங்களில் மொத்தம் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
‘ரியல் டைம் கண்காணிப்பு’ எனும் திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் எண்ணூா், அத்திப்பட்டு, புதுநகா், நத்தியம்பாக்கம், மீஞ்சூா், பொன்னேரி, கவரைப்பேட்டை, பெரம்பூா் லோகோ பணிமனை, வில்லிவாக்கம், கொரட்டூா், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனூா், ஆவடி, பட்டாபிராம், இந்துக் கல்லூரி, நெமிலிச்சேரி, திருநின்றவூா், செவ்வாய்ப்பேட்டை சாலை, புட்லூா், ஏகாட்டூா், கடம்பத்தூா், செஞ்சி பானம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், மணவூா் ஆகிய நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாகப் பொருத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கடந்த நிதியாண்டில் 630 குழந்தைகள் மீட்பு!

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் இயந்திரங்கள்

சென்னை ரயில் நிலையங்களில் 21 இடங்களில் மின் வாகன பேட்டரி மாற்றும் மையங்கள்

சென்னை ரயில்வே கோட்டத்தில் 20 புதிய வாகன நிறுத்துமிடங்கள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



